May 8, 2024
இறந்த மாட்டின் உரிமையாளருக்கு, இழப்பீடு ; அதிரடி காட்டிய நீதிமன்றம்

இறந்த மாட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு, அதிரடி காட்டிய நீதிமன்றம்

இறந்த மாட்டின் உரிமையாளருக்கு, ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த சின்னபள்ளம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் அருள், இவரது மனைவி சிவகாமி (45). அவர், பள்ளம்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் 3 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு, ஜூனில், ஒரு மாடு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது. தமது மாடுகளை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு […]

நாமக்கல்லில் அரசு வேலை : இன்றே அப்பிளை பண்ணுங்க..!

நாமக்கல்லில் அரசு வேலை : இன்றே அப்ளை பண்ணுங்க..!

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக பணியிடத்துக்கு, தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர், மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணி இடங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும், பிப். 2ம் தேதி, மாலை 4 மணிக்குள், கல்வித்தகுதி, சுயவிபரம், பணி அனுபவம் குறித்த […]

நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு

நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு

நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில், எம்.பி. ராஜேஸ்குமார் தலைமையில், மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், மத நல்லினிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக […]

மாநில அளவில் இரண்டாம் இடம் : எம்.பி பாராட்டு

மாநில அளவில் இரண்டாம் இடம் : எம்.பி பாராட்டு

75-வது குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது-2024 பெற்ற நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்  வாழ்த்துக்களை தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.01.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ச.உமா நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தஎஸ்.ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், 75-வது குடியரசு தின விழாவில் மாநில அளவில் 2 – வது சிறந்த […]

நாமக்கல்லில் தடையை மீறி போராட்டம் : போலீசிலரால் கைது

நாமக்கல்லில் தடையை மீறி போராட்டம் : போலீசிலரால் கைது

Hit & Run சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி தடையை மீறி நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 60 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். Hit & Run சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், சுங்க சாவடிகளில் பார்க்கிங் வசதி, மருத்தவ வசதி என அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் […]