திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் சமூக ஊடகப்பிரிவு பயிற்சி முகாம்
நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் சமூக ஊடகப் பயிற்சி முகாம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பயிற்சி நிகழ்ச்சியான சங்கநாத நிகழ்ச்சி இன்று கொங்கு சமுதாய கூட்டத்தில் நடைபெற்றது. இதில் மாநில IT Wing தலைவர் M.S பாலாஜி, IT Wing மாநில செயலாளர் நந்தகுமார், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். IT Wing கோட்ட இணை பொறுப்பாளர் சரவணன் அனைவருக்கும் சமூக ஊடக பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மாற்று கட்சியிலிருந்து வந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்த அனைவருக்கும் பாஜக நாமக்கல்மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் துண்டு அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.
பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு பாஜக சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் பாலாஜி, பத்தாண்டு கால பிரதமர் மோடி ஆட்சியின் பெருமைகளையும் நாட்டு மக்களுக்கு செய்துள்ள திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாகும். கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருந்தாலும் முக்கியமான பிரிவாக கருதப்படுவது சமூக ஊடகப்பிரிவு தான், ஒவ்வொருவரும் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். நமது திட்டங்கள் குறித்து தினமும் குறைந்தபட்சம் ஐந்து பதிவுகளையாவது பதிவு செய்ய வேண்டும். பாஜகவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது சமூக ஊடகத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது தான், நாமக்கல் மேற்கு மாவட்டத்தை பொருத்தவரை அனைத்திலும் சிறப்பாக இருந்தாலும் சமூக ஊடகப்பிரிவு சமூக ஊடகத்தில் நம்முடைய பங்களிப்பு குறைவாகத்தான் உள்ளது. இதனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதளங்களை கையாளுவது எப்படி என்பதை கட்சியினருக்கு எடுத்துக் கூறும் விதமாகவும் தான் இந்த முகாம் நடைபெறுகிறது. இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார், சமூக ஊடகப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ் பாலாஜி, சேலம் கோட்ட பொறுப்பாளர் நந்தகுமார், மாநில செயலாளர்கள் சரவணன், செந்தில், நகர பாஜக தலைவர் செங்கோட்டுவேல், மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ரமேஷ், சமூக ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர்கள் அருண்குமார், நாகராஜ், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : இண்டியா கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி – எல்.முருகன்
- திருச்செங்கோடு