நாமக்கல்லில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி துவக்கம்
நாமக்கல் மாவட்டம், லத்துவாடி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ-மாணவிகளின் கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், தமிழக அரசு சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் தனித்திறமை உள்ளது. அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டியாக நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கம் தான் கல்லூரி களப்பயணம் திட்டம் ஆகும். வருகின்ற மார்ச் மாதம் மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு நடைபெறுவதையொட்டி, மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில எந்த துறையை தேர்வு செய்யலாம் என்ற சந்தேகத்தை போக்கிடும் வகையில் இந்த கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் கால்நடை மருத்துக்கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் சென்று அந்த துறையில் உள்ள பாடங்கள் குறித்து கேட்டறிந்தனர், மேலும் ஆய்வகங்களில் உபயோகப்படுத்தப்படும் கருவிகள் குறித்தும் மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் செல்வராஜ் எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க : நாமக்கல்லில் சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு பேரணி
- நாமக்கல்