“மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் 4 ஆயிரம் மனுக்களுக்கு நடவடிக்கை
4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்கள்
அதன்தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 29.12.2023 இன்று வரை 10 நாட்களில் 13 அரசுத்துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு 39 முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து இதுவரை 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், பல்வேறு சேவைகள் பெறும் வகையில் பொதுமக்களால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி, ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் விரைவில் பரிசீலினை செய்யப்பட்டு அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட தகுதியான நபர்களுக்கு தேவையான அரசின் சேவைகள் உடனடியாக வழங்கப்படும்.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும்
மேலும், மக்களின் குடிநீர் தேவையை அடிப்படை தேவையாக கருதி மோகனூர் பேரூராட்சிக்கு புதியதாக மல்லம்பாளையம் என்ற இடத்தில் 3 எண்ணிக்கையிலான நீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பகிர்மான குழாய்கள் புதியதாக அமைத்து காவிரி கரையில் அமைந்துள்ள மோகனூர் பேரூராட்சி பகுதிகளுக்கு சீராக குடிநீர் விநியோகம் வழங்கும் வகையில் ரூ.22.77 கோடி மதிப்பீட்டில் பணிகள் விரைந்து தொடங்கப்பட்டு நடைபெறவுள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வசந்தபுரத்தில் அரசு சார்பில் கட்டப்படும் பிரமாண்டமான கட்டிடம் எதற்கு என தெரியுமா?
- நாமக்கல்