...
April 26, 2024
#செய்திகள்

“Mrs – Tamilnadu” பட்டம் வென்ற ராசிபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு வாழ்த்து

மிஸஸ் தமிழ்நாடு அழகியாக ராசிபுரத்தை சேர்ந்த கௌசல்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கோபி(39),கௌசல்யா(34) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கௌசல்யா ராசிபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கு, சிறுவயது முதலே அழகு கலை மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்ததால் பல்வேறு அழகிகள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நிலையில் கடந்த வருடம் சேலத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு “மிஸஸ் சேலம்” அழகியாக தேர்வு செய்தனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் “இந்தியா ஹேர் & பியூட்டி அசோசியன்” சார்பில் மிஸஸ் தமிழ்நாடு அழகி போட்டியானது நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கௌசல்யா மிஸஸ் தமிழ்நாடு பரிசை வென்றார். வெற்றி பெற்ற கௌசல்யாவுக்கு நடிகை நிக்கிகல்ராணி கோப்பைகளும் சான்றிதழையும் வழங்கினார்.

இது குறித்து மிஸஸ் தமிழ்நாடு அழகி கௌசல்யா கூறுகையில், தனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்து வந்ததால் கடந்த 13 வருடங்களாக பியூட்டி பார்லர் நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் மற்றவர்களுக்கு தொடர்ச்சையாக ஒப்பனை (makeup) செய்து வந்த நிலையில், தனக்கே அதன் மீது மிகுதியான ஆர்வம் வந்ததகவும், அதனால் தொடர்ச்சியாக பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தென்னிந்திய அளவில் நடைபெறும் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவது தனது லட்சியம் என கூறினார். “Mrs – Tamilnadu” பட்டம் வென்ற ராசிபுரத்தை சேர்ந்த கௌசல்யாவுக்கு அவரது குடுப்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க ;   ராசிபுரம் அருகே சாக்கடையில் வீசப்பட்ட ஆண் சிசு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.