எம்.பியை காணவில்லை என நாமக்கல் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றி பெற்று எம்.பியாக உள்ளார். இம்முறை நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், நாமக்கல் தொகுதி திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் நாமக்கல் நகரிலும், நாடாளுமன்ற தொகுதி […]
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், ஒரே நாளில், 3 வழக்குகளில், சமரச தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ. 34 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார் (42). அவருக்கு சொந்தமாக பொக்லைன் வாகனம் உள்ளது. 2022, மே மாதம், பொக்லைன் வாகனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டதால், அவற்றை சரி செய்ய, ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஹைட்ராலிக் சர்வீஸ் நிறுவனத்தில் கொடுத்துள்ளார். பழுது பார்க்கும் செலவுகளுக்காக, ரூ. 78 ஆயிரத்து 650 ரவிக்குமார் […]
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், நாமக்கல் ரயில் நிலையத்தில் ரூ. 13.28 கோடி மதிப்பில் மேம்பாட்டு திட்டப்பணிகளை நேற்று முன்தினம் (26.02.24) காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும், 554 ரயில் நிலையங்களின் மறு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் […]
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP – IV தேர்விற்கு இலவச TEST BATCH, […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் நகர அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று (24.02.2024) அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் நாமக்கல் நகர அதிமுக சார்பில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மூன்று சிலை அருகே, […]
நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று (24.02.24) தொடங்கியது. திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டி தொடங்குவதற்கு முன் போட்டிக்கான வழிமுறைகளை ராஜேஸ்குமார் அவர்கள் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியோடு ஏற்றுக் கொண்டனர். நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து […]