...
April 26, 2024
#செய்திகள்

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் – அன்னதானம் வழங்கிய நகர அதிமுகவினர்

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் - அன்னதானம் வழங்கிய நகர அதிமுகவினர்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் நகர அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமை‌ச்ச‌ருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் திரு உருவப்படத்திற்கும், சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன்படி, நாமக்கல் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக நகர செயலாளருமான கே‌.பி.பி. பாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் மூன்று சிலை அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை கொண்டாடினார்.

அதேபோல், நாமக்கல் மேட்டுத்தெருவில் அதிமுக 15-வது வார்டு செயலாளர் ராமு தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ கே‌.பி.பி பாஸ்கர், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் நகர அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இதையும் படிங்க ; நாமக்கல்லில் நில அதிர்வு..?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.