நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் 2 வது நாளாக தொடர் சோதனை
நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் 2 வது நாளாக தொடர் சோதனை நடத்தினர்.
நாமக்கல்லை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சத்தியமூர்த்தி & கோ என்ற பெயரில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அரசு மருத்துவக் கல்லூரி, தமிழக அரசின் குடிநீர் திட்டங்கள், குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் உள்ளிட்ட அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து எடுத்து பல ஆண்டுகளாக கட்டுமான பணிகளை செய்து வருகிறார். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சத்திய மூர்த்தி & கோ நிறுவனம் தான் கட்டுமான பணிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் சத்தியமூர்த்தி வசித்து வரும் நாமக்கல் சூர்யா காடார்டனில் உள்ள அவரது வீடு, முல்லை நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துணை ராணுவத் துறையினரை பாதுகாப்புடன் கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் தான் எந்த விதமான ஆவணங்கள் மற்றும் எவ்வளவு ரொக்கங்கள், பனபரிவர்த்தனைக்ள் குறித்து பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும்.
இதையும் படிங்க : நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் சோதனை
- நாமக்கல்