...
May 2, 2024
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாமக்கல் காவல் நிலையத்திற்கு விருது..!

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாமக்கல் காவல் நிலையத்திற்கு விருது..!

சென்னையில் நடைபெற்ற 75-ஆவது குடியரசு தின விழாவில், 2023-ஆம் ஆண்டுக்கான ஆய்வில், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக மாநில அளவில் நாமக்கல் நகர காவல் நிலையம் இரண்டாமிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான விருதை நாமக்கல் நகர காவல் நிலைய ஆய்வாளர் சங்கரபாண்டியனிடம் வழங்கிப் பாராட்டினார். இந்த விருதைப் பெற்ற காவல் ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணா  வாழ்த்து தெரிவித்துள்ளார். குற்ற […]

அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் புதிய மகளிர் விடுதி - எம்பி தகவல்

அரசு கால்நடை மருத்துவ கல்லூரிக்கு விரைவில் புதிய மகளிர் விடுதி – எம்பி தகவல்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் புதிய மகளிர் விடுதி அமைக்க 50 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து வழங்குவதாக எம்பி ராஜேஸ்குமார் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாநிலங்கவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கல்லூரியில் பயிலும் வெளிமாநில மாணவ, மாணவிகளுக்கு அவர் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாணவிகள்  சிரமம் அடைந்துள்ளனர் இந்த விழாவில் பேசிய […]

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி - ஆட்சியர் துவக்கி வைத்தார்

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி – ஆட்சியர் துவக்கி வைத்தார்

தேசிய வாக்காளர்கள் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆட்சியர் உமா பங்கேற்றார். நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நேற்று (25.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை கொடிசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியானது. நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) தொடங்கி. பேருந்து நிலையம் வழியாக நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் […]

காந்தமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழா - எம்.எல்.ஏ பங்கேற்பு

காந்தமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழா – எம்.எல்.ஏ பங்கேற்பு

மோகனூரில் அமைந்துள்ள காந்தமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார். நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று (25.01.2024) தைப்பூச […]

பல்லடம் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரில், தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளராக நேசபிரபு என்பவர் பணியாற்றி வருகின்றார். நேற்று இரவு நேசபிரபுவை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த நேசபிரபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.