...
April 26, 2024
#செய்திகள்

கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு : 14ம் தேதி இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி, கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி, கரும்பு பயிரில் ‘இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளதாக வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வரும் 14ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, கரும்பில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

பயிற்சியின் முக்கியத்துவம் ;

இப்பயிற்சியில் கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், வளர்ச்சியூக்கிகள் பற்றியும், குறைந்த செலவில் அதிகம் இலாபம் பெற தேவையான தொழில் நுட்பங்களையும் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது.

பங்குபெற தகுதியானோர்

இதில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

நடைபெறும் இடம்

ஆகையால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ள தொடர்புக்கு 04286 266345, 7010580683, 9597746373, 9943008802 என்ற தொலைபேசி எண்களை அணுகவும், பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.