...
April 25, 2024
#செய்திகள்

லத்துவாடி அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ

லத்துவாடி அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ

லத்துவாடி அருகே குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது, இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வகுரம்பட்டி ஊராட்சியில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள லத்துவாடி அரசு கல்லூரி மாணவர்கள் விடுதி அருகே குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (02.01.2024) மாலை திடீரென குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. சாலையில் அந்த வழியாக சென்றவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்,

லத்துவாடி அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ

அப்போது கரும்புகை அதிகமாக இருந்ததால் மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் முயற்சியில் ஈடுப்பட்டனர். இருப்பினும் புகை மண்டலத்துடன் குப்பைமேடு காட்சியளித்ததுடன் அருகில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் உள்ள மாணவர்களும் சிரமமடைந்தனர்.

இதனையடுத்து, சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கடுமையான கரும்புகை வெளியேறியதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்தனர். 

 

இதையும் படிங்க ; நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.