...
April 27, 2024
#செய்திகள்

கருப்பு உடை அணிந்து பொங்கல் வைத்த கிராம மக்கள்

கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து பொங்கல் வைத்த கிராம மக்கள்

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடைகளை அணிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி, என்.புதுப்பட்டி பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக தொழில் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் 450-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிப்காட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாய முன்னேற்றக்கழகம் சார்பில் இதுவரை 49 போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசின் அரசின் இலவச பொங்கல் தொகுப்பை புறக்கணிப்பதாக வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடைகளை அணிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள்
தொடர்ந்து 50 போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராதது மிகுந்த வேதனையாக உள்ளது எனக் கூறினர்.

இதையும் படிங்க ; திருச்செங்கோட்டில் பெண்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.