மனைவியிடம் வசமாக சிக்கி கொண்ட போலி கலெக்டர்:
ஆயிரம் பொய் கூறி திருமணம் செய்யலாம் என்ற கூற்றுக்கு ஏற்ப ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பதாக பொய் கூறி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட பெண் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் நகரில் உள்ள முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (37). இவர் இந்திய ஆட்சி ஆட்சிப்பணியில் ( ஐ.ஏ.எஸ் ) இருப்பதாக கூறி கடந்த 24.02.21 ம் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குமாரிபாளையத்தை சேர்ந்த அகல்யா (27) என்பவரை திருமணம் செய்துள்ளார்.
போலி ஐஏஎஸ் என தெரிந்து அதிர்ச்சி :
நாட்கள் போக போக ராஜாவின் நடவடிக்கையில் அகல்யாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜாவின் ஆவணங்களை எடுத்து பார்த்த அகல்யா ராஜா “ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அகல்யா தனது கணவர் ராஜாவிடம் கேட்ட போது, அதற்கு அகல்யாவை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் வீட்டில் பூட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மோகனூர் போலீசில் புகார்:
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை வீட்டு வெளியே வந்த அகல்யா, ராஜா தன்னை ஐ.ஏ.எஸ் என ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாகவும் , அவருக்கு உறுதுணையாக இருந்த தாய் சாந்தி, தந்தை கந்தசாமி, தமிழ்செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மோகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர்.
அதன் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தலைமறைவாக உள்ள ராஜா உட்பட 4 பேர் தீவிரமாக தேடி வருகின்றனர், நாமக்கல்லில் ஐஏஎஸ் அதிகாரி என பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க ; திருச்செங்கோட்டில் புகையில்லா போகி விழிப்புணர்வு : எம்.எல்.ஏ ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் பங்கேற்பு
- நாமக்கல்