நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அறிவிப்பு
நாமக்கல் மாவட்ட அளவில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஜூனியர் தடகள போட்டிகள் வருகின்ற 27ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவரும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான சின்ராஜ், செயலாளர் வெங்கடாஜலபதி, ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் வருகின்ற 27ம் தேதி (சனிக்கிழமை), நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 19.02.2010 முதல் 18.02.2012 வரை பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 16 வயதிற்கு உட்பட்டவர்கள் 19.02.2008 முதல் 18.02.2010 வரை பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த தடகளப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உரிய பிறந்த தேதி சான்றுடன், போட்டி நடக்கும் அன்றைய தினமான 27ம் தேதி சனிக்கிழமை காலை காலை 7 மணிக்குள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.
14 வயது மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக நடைபெறும் போட்டிகள் விபரம்:
ட்ரையாத்லான் போட்டி, 60 மீட்டர், 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 600மீ குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் பெண்டத்லான் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். மேலும் இப்போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெறும் வீரர்கள் மற்றம் வீராங்கணைகள் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
- நாமக்கல்