பரமத்தி வேலூரில் வெல்லத்தில் கலப்படம் : 12 டன் சர்க்கரை பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளான கபிலர்மலை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், சாணார்பாளையம், கள்ளிப்பாளையம், பொன்மலர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வெல்ல ஆலை கொட்டகைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கொட்டகைகளில் கரும்பிலிருந்து சாறு பிழிந்து குண்டு வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால் வெல்லம் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக குண்டு வெல்லம், […]