...
April 21, 2024
#ஆன்மீகம் #செய்திகள்

அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு..!

Stand on the sickle and say grace..!

நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டி கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ளது முட்டாஞ்செட்டி கிராமத்தில் மாசி பெரியண்ணசாமி என்ற கோவில் உள்ளது. இங்கு இளையராஜா என்ற பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு சொல்லி வருகிறார்.

இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு மாசி பெரியண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் கோவில் பூசாரி இளையராஜா கத்தி மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறினார்.

அவரிடம் குடும்பப் பிரச்சனை, வேலை வாய்ப்பு, குழந்தை பேறு, கணவன் மனைவி குடும்ப பிரச்சனை மற்றும் தொழில் சம்பந்தமாக பக்தர்கள் அவரிடம் அருள் வாக்கு கேட்டனர். அப்போது கோவில் பூசாரி அரிவாள் மீது குதித்தப்படியே நின்று கொண்டு அருள் வாக்கு கூறினார். இதற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அருள் வாக்கு கேட்டனர்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.