...
April 21, 2024
#செய்திகள்

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய குஜராத் எம்.பி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை குஜராத் மாநிலங்களவை பெண் உறுப்பினர் ரமீலா பென் பாரா துவக்கி வைத்தார். மேலும் ஆங்கில புத்தாண்டினை கேக் வெட்டி கொண்டாடினர்.

மத்திய அரசு விஸ்வகர்மா என்ற திட்டத்தின் மூலம் சிறுகுரு தொழில்களை ஊக்குவிக்கவும், குல தொழிலை வளர்க்கவும் விஸ்வகர்மா என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சூழ்நிலையில், கிராமப் பகுதிகளிலும் விஸ்வகர்மா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரமீலா பென் பாரா  கலந்துகொண்டு பயனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது குஜராத் மாநிலத்தின் கடைக்கோடி பகுதியான சாந்தி நகர் பகுதியில் இருந்து தான் வந்துள்ளதாகவும், இந்த விஸ்வகர்மா திட்டம் சிறந்த திட்டம் என தெரிவித்ததுடன், தமிழகத்தில் 86 லட்சம் மனுக்கள் இது வரை பெறப்பட்டுள்ளது, இதில் 32 லட்சம் மனுக்கள் மாவட்ட நிர்வாக மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியின் இறுதியாக ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கி வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், செயலாளர் சரவண ராஜன், பொறியாளர் நாகராஜன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : குமாரபாளையத்தில் சத்துணவு பணியாளர் கொலை 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.