...
April 18, 2024
#செய்திகள்

பிப்ரவரி-2ல் ஆர்ப்பாட்டம்: நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

பிப்ரவரி-2ல் ஆர்ப்பாட்டம்: நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி-2ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜான்பாஷா தலைமை வகித்தார். செயலாளர் கோபாகிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

நாமக்கல் நெடுஞ்சாலைத் துறைகோட்டத்தில் சாலைபணியாளர்கள் முதுநிலை பட்டியல் விதிமுறைகளுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை முறையாக திருத்தி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 2- ந் தேதி சாலை பணியாளர்கள் நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் அறிவழகன், கண்ணன், குணசேகரன், இணை செயலாளர்கள் ரமேஷ், முருகன், ராமசாமி, முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : தீரன் சின்னமலை மாளிகையை எம்.எல்.ஏ ஈஸ்வரன் திறந்து வைத்தார் 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.