...
April 23, 2024
#சற்றுமுன்

நள்ளிரவில் லாரியில் இருந்து சரிந்த கரும்புகள் : கரும்புகளை வேட்டையாடிய மக்கள்

நள்ளிரவில் லாரியில் இருந்து சரிந்த கரும்புகள் : கரும்புகளை வேட்டையாடிய மக்கள்

நள்ளிரவில் அதிக பாரம் ஏற்றி வந்த கரும்பு லாரி ஈரோடு – சேலம் நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த கரும்புகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.


சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சார்ந்த சக்திவேல் என்பவர் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரி மூலம் கரும்புகளை ஏற்றி வந்தார். அப்போது லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதி அருகே வந்தபோது இருந்து லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கரும்புகளை ஏற்றி வந்ததால் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் பள்ளிபாளையம் அடுத்து உள்ள தெற்கு பாளையம் பகுதியில் லாரியிலிருந்து கரும்புகள் சரிந்து திடீரென சாலையில் கொட்டியது.

இதனைதொடர்ந்து சாலையில் கொட்டிய கரும்புகளை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் கரும்புகளை அள்ளிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுனர் அவசர அவசரமாக மற்றொரு லாரியினை கொண்டு வந்து கீழே சரிந்து விழுந்த கரும்புகளை  ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார்.‌

தொடர்ந்து அவ்வழியே செல்லும் போக்குவரத்துகள் மாற்றுவழி பாதையில் மாற்றி விடப்பட்டது.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையும் படிங்க: (24.12.23) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள்
 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.