...
April 26, 2024
#செய்திகள்

ஊராட்சி மன்றத்தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!

Allegation of sensationalism against Panchayat Council President..!

செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பணத்தை கையாடல் செய்ததாக பெண் துணைத்தலைவர் நாமக்கல் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சத்யபாமா வேல்முருகன். இவர் இன்று (05.02.2024) நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் தியாகராஜன் என்பவர் ஊராட்சி நிதி வங்கி கணக்கு எண் 1 ல் உள்ள ரூ.3,73,168 ஐ முறைக்கேடாக கையாடல் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி நிதியை முறைக்கேடாக கையாடல் செய்ததாக துணைத்தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.