...
April 23, 2024
#ஆன்மீகம்

கிறிஸ்துமஸ் பண்டிகை – நாமக்கல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகை - நாமக்கல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

நாமக்கல் கிறிஸ்தவ ஆலயங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற  சிறப்பு பிராத்தனை நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அந்த வகையில், நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மறை வட்ட முதன்மை குரு  தாமஸ் மாணிக்கம், அருள்தந்தை  ஜோதி பெர்ணான்டோ  தலைமையில் இன்று காலை சிறப்பு பிராத்தனை நநடைபெற்றது . அப்போது ஆப்ரிக்கநாட்டு மக்கள் வறுமை  நீங்கவும், தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெற சிறப்பு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டன.  தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அறிவிக்கப்பட்டு , ஆசிர்வாதம் வழங்கப்பட்டன. 

கிறிஸ்துமஸ் பண்டிகை - நாமக்கல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

தொடர்ந்து சேலம் சாலையில் ஏ.ஜி கிறிஸ்தவ ஆலயத்தில், எஸ்.பி.எம் பள்ளியில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி வெகு சிறப்பாக நடைபெற்றன. மேலும், தேவாலயத்தில் கிறிஸ்து பிறந்தது முதல் சிலுவையில் ஏற்றப்பட்டது வரையிலான சிறிய சொரூபங்கள் அனைத்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் லாரியில் இருந்து சரிந்த கரும்புகள் : கரும்புகளை வேட்டையாடிய மக்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.