...
April 20, 2024
#செய்திகள்

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் : நாமக்கல்லில் திமுகவினர் அமைதி பேரணி

பேரறிஞர் அண்ணா 55 ஆம் ஆண்டு நினைவு தினம் : நாமக்கல்லில் திமுகவினர் அமைதி பேரணி.

பேரறிஞர் அண்ணாவின் 55-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயளாலரும், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் பங்கேற்றார்.

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாமக்கல்லில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேதாஜி சிலை அருகில் இருந்து துவங்கி பிரதான சாலை, பேருந்து நிலையம் வழியாக பேரணியானது மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

பின்னர் அண்ணா சிலைக்கு , கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, நகர செயலாளர் சிவகுமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.