...
April 26, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கோட்டம் வருகின்ற 30-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கோட்ட அளவிலான ஜனவரி 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் உட்கோட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் வருகின்ற 30.01.2024 -ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அறிவிப்பு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.