இந்திய விமானப் படையில் வேலை :
இந்திய விமானப் படையின் “அக்னி வீர் வாயு” ஆக பணிபுரிய விண்ணிப்பக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய விமானப்படையில் நான்கு வருட காலம் அக்னிவீர் வாயுவாக பணிபுரிவதற்கு “அக்னி வீர்வாயு தேர்வு” நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக 17.01.2024 முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு 17.03.2024 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பம் செய்பவர்களுக்கு பிறந்த தேதி 02.01.2004 முதல் 02.07.2007க்குள் இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்/பெண்ணாக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
12-ஆம் வகுப்பு (10+2) கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடப்பிரிவைப் பயின்றவர்கள்) /டிப்ளமோ /இரண்டு வருட வொக்கேஷனல் படிப்பு பயின்றவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி https://agnipathvayu.cdac.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இத்தேர்வு குறித்த விபரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம்.
இல்லையெனில், அலுவலக தொலைபேசி எண் 04286-222260 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இந்திய விமானப் படையின் அக்னி வீர் வாயுவுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பம் செய்து தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா, தெரிவித்துள்ளார்.
- நாமக்கல்