ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா.. எங்கே தெரியுமா..?
நாமக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவில் 5 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது. மழைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும். மழைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர். இங்கு வருடம்தோறும் தைமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி சமாபந்தி விருந்து வைக்கப்படும். இதையொட்டி மாலை 7 மணிக்கு சமாபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின.
ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையின் முடிவில் 32ஆடுகள்(600கிலோ), 60(1300 கிலோ) பன்றிகள், 60(80கிலோ) சேவல்கள் பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை பலியிட காணிக்கையாக கொடுத்தனர். தொடர்ந்து சிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமாபந்தி விருந்துக்கான சமையலை 50 க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே செய்தனர். சுமார் 2000கிலோ கறி சமைக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விருந்து சாப்பிட்டு சென்றனர்.
இதையும் படிங்க : ஊராட்சி மன்றத்தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!
- இராசிபுரம்