ராசிபுரத்தில் வருகின்ற 23ம் தேதி மின்நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் துணை மின்நிலையத்தில் வருகின்ற 23-ம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அன்றைய தினம் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சனநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 23ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் ராசிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்; | |
வ.எண் | பகுதிகள் |
1 | இராசிபுரம் |
2 | முத்துக்காளிப்பட்டி |
3 | மசக்காளிப்பட்டி |
4 | புதுப்பாளையம், |
5 | பட்டணம்முனியப்பம்பாளையம் |
6 | வடுகம் |
7 | கவுண்டம்பாளையம் |
8 | முருங்கப்பட்டி |
9 | போடிநாயக்கன்பட்டி |
10 | மோளப்பாளையம் |
11 | அரசப்பாளையம் |
12 | வேலம்பாளையம் |
13 | வெள்ளாளப்பட்டி |
14 | பட்டணம் |
15 | கூனவேலம்பட்டி புதூர் |
16 | குருசாமிபாளையம் |
17 | கதிராநல்லூர் |
18 | நத்தமேடு |
19 | சிங்காளந்தபுரம் |
20 | கண்ணூர்பட்டி |
உள்ளிட்ட பகுதிகளில் வரும் 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க ; பரிசலில் சென்று கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த கிராம மக்கள்
- இராசிபுரம்