...
April 22, 2024
#செய்திகள்

நாமக்கலில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அதிரடி உத்தரவு

நாமக்கலில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அதிரடி உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், வருகின்ற 16.01.2024 திருவள்ளுவர் தினம், 25.01.2024 வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் மற்றும் 26.01.2024 குடியரசு தினம் ஆகிய தினத்தினை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான டாஸ்மாக் கடைகள், பார்களை மூடப்பட வேண்டும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆனது தோறும் தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம், வடலூர் இராமலிங்கர் நினைவு நாள், குடியரசு தினம்,சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி இந்தாண்டு வருகின்ற 16.01.2024 திருவள்ளுவர் தினம், 25.01.2024 வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் மற்றும் 26.01.2024 குடியரசு தினம் ஆகியவை அனுசரிக்கபடவுள்ளது. அதன்படி ன்னமாக்கல் மாவட்டத்தில்,அன்றைய தினத்தில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக்), பார்கள், FL1, FL2, FL3, FL 3A, FL 3AA மற்றும் FL 11 வரையிலான உரிம வளாகங்களை மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கண்ட நாளில் டாஸ்மாக் கடைகள் அல்லது பார்களை திறந்தாலோ, சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.ச.உமா தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க ; கேலோ இந்தியா – 2023 : விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

3 Comments

  1. sky pharmacy
    21st Apr 2024 Reply

    [url=http://drugstorepp.online/]rxpharmacycoupons[/url]

  2. [url=http://azithromycinhq.com/]azithromycin 1000 for sale[/url]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.