நாமக்கல் ரயில் நிலையம் வந்த 2,600 டன் சோயா
நாமக்கல் ரயில் நிலையத்திற்கு மத்தியப்பிரதேசத்தில் இருந்து 2,600 டன் சோயா ரயில் மூலம் வந்தது.
நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் நாமக்கல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் ரயில் மட்டுமின்றி சரக்கு ரயிலும் அதிகளவில் வருவது வழக்கம். இங்கு மற்ற மாநிலங்களில் இருந்து அவ்வபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ரேசன் அரிசியும், கோழிப்பண்ணைகளுக்கு மக்காச்சோளம், சோயா, தவிடு, புண்ணாக்கு ஆகியவை சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும்.
அதன்படி இன்று, நாமக்கல் ரயில் நிலையத்திற்கு மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து சுமார் 2,600 டன் சோயா ரயில் மூலம் வந்தது. 51 பெட்டிகளில் வந்த சோயா மூட்டைகளை தொழிலாளர்கள் 110 லாரிகளில் ஏற்றினர். பின்னர், அவற்றை கோழி தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க ; எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் – அன்னதானம் வழங்கிய நகர அதிமுகவினர்
- நாமக்கல்