நாமக்கல்லில் வரும் 28ம் தேதி தபால் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் வரும் 28ம் தேதி தபால் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக தபால்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்ட அளவிலான, தபால்துறை துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 28ம் தேதி மாலை 3.30 மணியளவில், நாமக்கல் திருச்சி ரோட்டில் ரவி பிளாசா கட்டிடத்தில் உள்ள, அஞ்சல் கோட்ட கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தபால்துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருப்பின், தங்களது புகார்களை, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல்-637001 என்ற முகவரிக்கு வருகிற 27ம் தேதிக்குள் வந்து சேருமாறு புகார் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். புகார் அனுப்பும் அஞ்சல் உறையின் மீது அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்பந்தமாக என்று எழுதப்பட வேண்டும்.
குறைத்தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். புகார் கடிதத்தில் முழுத் தகவல்களும் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் எண், எந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும். புகார்கள் சேமிப்பு கணக்கில் (அ) அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் இருப்பின், அதன் அக்கவுண்ட் நம்பர், பிஎல்ஐ, ஆர்பிஎல்ஐ பாலிசி நம்பர், முகவரி மற்றும் எந்த ஆபீசில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய விபரங்களை முழுமையாக குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாமக்கல்