...
April 23, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் தடையை மீறி போராட்டம் : போலீசிலரால் கைது

நாமக்கல்லில் தடையை மீறி போராட்டம் : போலீசிலரால் கைது

Hit & Run சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி தடையை மீறி நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 60 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

Hit & Run சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், சுங்க சாவடிகளில் பார்க்கிங் வசதி, மருத்தவ வசதி என அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கத்தின் மாநில தலைவர் பத்மராஜா தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஓட்டுநர்கள் ஈடுப்பட்டனர். ஆனால் இவர்களது போராட்டத்திற்கு நாமக்கல் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பூங்கா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.