...
April 26, 2024
#ஆன்மீகம் #செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 10 சவரன் தங்க சங்கிலி காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 10 சவரன் தங்க சங்கிலி காணிக்கை

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பக்தர் ஒருவர் 10 சவரன் தங்க செயினை காணிக்கையாக வழங்கினார்.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் இரு கைகளை கூப்பியவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவதால் நாள் தோறும் தரிசனம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சேலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், தான் நினைத்த காரியம் நிறைவடைந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார்.

அப்போது, தனது வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்த ஆஞ்சநேயருக்கு 10 சவரன் தங்க சங்கிலியை காணிக்கையாக வழங்கினார்.  சங்கலியில் ராமர் மற்றும் சீதை உருவம் பாதிக்கபட்ட டாலர் இடம்பெற்றிருந்தது.  அந்த தங்க சங்கிலியை பட்டாச்சாரியர்கள் சிறப்பு பூஜை செய்து இரு கைகளையும் கூப்பியவாறு வீற்றிருக்கும் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு வண்ண பூக்கள் கொண்டு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய காலை முதல் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க ; நாமக்கல்லில் இப்படியும் சில கிராமங்களா..! 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடத கிராமங்கள்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.