...
April 24, 2024
#சற்றுமுன்

அலங்காநத்ததில் ஜல்லிக்கட்டு போட்டி

அலங்காநத்ததில் ஜல்லிக்கட்டு போட்டி

நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.

நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று (24.02.24) தொடங்கியது. திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டி தொடங்குவதற்கு முன் போட்டிக்கான வழிமுறைகளை ராஜேஸ்குமார் அவர்கள் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியோடு ஏற்றுக் கொண்டனர்.

நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300 மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும், தங்க காசுகள், வெள்ளி காசுகள், பீரோ, டேபிள், சேர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

காளைகளும், மாடு பிடி வீரர்களும் மருத்துவர்களின் சோதனைக்கு பிறகே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. அசம்பாவீதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க :(24.02.24) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்


Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.