...
April 26, 2024
#வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைபிரிவில் சேருவதற்கான உடற்தகுதி தேர்வு கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைபிரிவில் சேருவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு உடல் தகுதித்தேர்வு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு வரும் போது அனுமதி சீட்டு. கல்வி சான்றிதழ், காவல் நன்னடத்தை சான்று. இருப்பிடச்சான்று, ஜாதி சான்று. பான்கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.

இது குறித்த விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இது குறித்த விவரங்களுக்கு 04286 222260 என்ற எண்ணைத் தொடர்புக்கொள்ளவும். மேலும், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் ஆள்சேர்ப்பு முகாமில் பங்குபெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்கள்.

இதையும் படிங்க: நீங்களும் ஒரு தொழில் முனைவோர் ஆகலாம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.