முதல் முறையாக மாட்டு வண்டியில் பயணித்து vibe ஆன மழலையர்
குமாரபாளையத்தில் உள்ள எக்ஸெல் பப்ளிக் பள்ளியில் பொங்கல் பண்டிகையொட்டி நடைபெற்ற விழாவில், குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு முதன்முறையாக மாட்டு வண்டியில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 15-ம் தேதி தை முதல் நாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையாக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், அரசு கல்லூரி மற்றும் பள்ளிகள் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எக்ஸெல் பப்ளிக் பள்ளியில் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய கிராமிய நடனங்களான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவை காண்பிக்கப்பட்டது. இதனை சிறுவர் சிறுமியர் கைதட்டி ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் சிறுவர் சிறுமியரும் நடனமாடி மகிழ்ந்தனர்.
மாட்டு வண்டியில் பயணம் செய்து VIBE ஆன மழலையர் ;
இரண்டு சக்கர வாகனம் மற்றும் சொகுசு கார்களிலேயே பயணம் செய்த சிறுவர் சிறுமிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டு வண்டியில் ஏறி சிறுவர் சிறுமிகள் பள்ளி விளையாட்டு மைதானத்தை முழுவதுமாக சுற்றி வந்தனர். மாட்டு வண்டியில் ஏறி சுற்றி வருவதற்கு சிறுவர் சிறுமிகள் போட்டி போட்டுக் கொண்டது, காண்பவரை மகிழ்ச்சி அடையச் செய்தது. மேலும் முதல்முறையாக மாட்டு வண்டியில் சென்றதால் சிறுவர் சிறுமிகளும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க ; திருச்செங்கோட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட்டு போட்டிகள்
- குமாரபாளையம்