எம்.பி ராஜேஸ்குமாரின் முகநூல் பக்கம் முடக்கம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி.யின் முகநூல் பக்கம், ஹேக் செய்து முடக்கப்பட்டது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒருவருடடைய ஃபேஸ் புக் அக்கவுண்டை ஹேக் செய்து, மர்ம நபர்கள் அதில் உள்ள நண்பர்களுக்கு தகவல்களை அனுப்பி பணம் பெற்று மோசடி செய்வது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே பல பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநிலங்கவை உறுப்பினராகவும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான ராஜேஸ்குமார், பெயரில் சமூக வலைதள கணக்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத இ-மெயில் மூலம் எம்பி ராஜேஸ்குமாரின் முகநூல் பக்கங்கள் மர்ம நபர்கள் ஹேக் செய்து முடக்கப்பட்டது.
இதனையடுத்து, ராஜேஸ்குமார் எம்.பி சார்பாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க ; சேந்தமங்கலத்தில் நாளை மறுநாள் மின்தடை
- நாமக்கல்