...
April 22, 2024
#செய்திகள் #பிளாஷ் நியூஸ்

சேந்தமங்கலத்தில் நாளை மறுநாள் மின்தடை

சேந்தமங்கலத்தில் நாளை மறுநாள் மின்தடை

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி மற்றும் கெட்டிமேடு ஆகிய பகுதிகளில் வரும் 20ம் தேதி, அதாவது நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வரும் 20ம் தேதி, அதாவது நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம், பொட்டணம், பச்சுடையாம்பட்டி, நைனாமலை அடிவாரம், சாலையூர் உள்ளிட்ட பகுதிகளில், வரும் 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது.

எருமப்பட்டி

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 20ம் தேதி சனிக்கிழமை, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று 9 காலை மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையான்பட்டி, நாவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, கவக்கரம்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வரும் 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது. 

கெட்டிமேடு

நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு, துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 20ம் தேதி சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும். இதனால் கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாய்க்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; நாமக்கல்லில் டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர் பலகை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.