நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது : 42 பவுன் தங்க கட்டிகள் பறிமுதல்
நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 42 பவுன் தங்க கட்டிகள் மீட்கப்பட்டது.
தொடர் திருட்டு :
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி பள்ளிப்பட்டியில் கடந்த மே மாதம் 4-ந் தேதி , அன்பழகன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகளையும், தத்தாதிரிபுரத்தில் கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 58½ பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தையும், கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி பெருமாகவுண்டம்பட்டி அருகே உள்ள வேப்பம்பட்டிபுதூரில் கதிர்வேல் என்பவரின் வீட்டில் 14 பவுன் நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதோடு, கடந்த மே மாதம் 22-ஆம் தேதி வலத்தூரை சேர்ந்த கோபி என்பவரை கைது செய்திருந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கோபி அளித்த தகவலின் அடிப்படையில், தலைமுறைகளாக இருந்த குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணி பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் மதன்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் நடந்து சென்ற நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கன்னடத்தில் முன்னுக்கு முரணாக பதிலளித்தார்.
இருவர் கைது :
பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் பெங்களூரு மாநிலம் பென்னி பேட்டையை சேர்ந்த டேவிட் என்கிற டேவிட்டிசல்வா (வயது 39) என்பதும் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கோபி என்பவருடன் இணைந்து நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
தங்க கட்டிகள் பறிமுதல் :
இதனையடுத்து டேவிட்டிடம் இருந்து 42 பவுன் தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கட்டிகள் அனைத்தும் டேவிட் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்த தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து டேவிட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகை – நாமக்கல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
- நாமக்கல்