...
April 25, 2024
#க்ரைம் #செய்திகள்

நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை நாமக்கல் போலீசார் விசாரணை.

நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (33), இவர் நாமக்கல் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி முதல் கணவர் விவாகரத்து ஆன நிலையில் ஈரோட்டில் பணிபுரிந்த போது உடன் பணிபுரிந்த காவலர் சேகர் என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார். சேகர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

பெண் காவலர் வைஷ்ணவி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய நிலையில் கடந்த மாதம் 22 ம் தேதி தான் நாமக்கல் ஆயுதப்படைக்கு பணியிடமாறுதல் பெற்று  பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் தான் நேற்று முந்தினம் 28 ம் தேதி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள தெருவில் வாடகை வீட்டில் வசதித்து வந்த நிலையில் வீட்டில் இருந்த வைஷ்ணவி களைக்கொல்லி மருத்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் அவராகவே நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வைஷ்ணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர் வைஷ்ணவிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.