...
April 23, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!

நாமக்கல்லில் அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்;

நாமக்கல் மாவட்டத்தில், 19 வட்டார வளர்ச்சி அலுவலர்களை (பி.டி.ஓ.) இடமாற்றம் செய்து, ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. அதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய அரசுத்துறை அதிகாரிகள், நாடு முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றியவட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பி.டி.ஓ.) 19 பேரை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

அதன் விபரம்:
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கூடுதல் பி.டி.ஓ., அருண்குமார், அதே பிரிவில், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பரமத்தி பி.டி.ஓ., (கிராம பஞ்.,) நடராஜன், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட கூடுதல் பி.டி.ஓ.,வாகவும், திருச்செங்கோடு பி.டி.ஓ., (கிராம பஞ்.,) கஜேந்திரபூபதி, மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு பி.டி.ஓ.,வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட சேமிப்பு அலுவலக பி.டி.ஓ., சங்கர், நாமக்கல் டேன்பிநெட் பி.டி.ஓ.,வாகவும், மல்லசமுத்திரம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) லோகமணிகண்டன், எலச்சிப்பாளையத்துக்கும், புதுச்சத்திரம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) மகாலட்சுமி, எருமப்பட்டிக்கும் (வட்டார பஞ்.,) இடமாற்றம் செய்யப்பட்டனர்.

எருமப்பட்டி பி.டி.ஓ., (வட்டார பஞ்.,) சுகிதா, அதே வட்டாரத்தில், கிராம பஞ்சாயத்துதுக்கும், பள்ளிபாளையம் பி.டி.ஓ., மலர்விழி (கிராம பஞ்சாயத்து) கபிலர்மலைக்கும், எருமப்பட்டி பி.டி.ஓ. (கிராம பஞ்சாயத்து) பத்பநாபன், கொல்லிமலைக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பி.டி.ஓ., விஜயகுமார், மல்லசமுத்திரத்துக்கும், சேந்தமங்கலம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) ரவிச்சந்திரன், மோகனூருக்கும், எலச்சிப்பாளையம் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) பிரபாகர், நாமக்கல்லுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கபிலர்மலை பி.டி.ஓ., (வட்டார பஞ்.,) பள்ளிபாளையத்துக்கும் (கிராம பஞ்.,), நாமக்கல் பி.டி.ஓ., பாஸ்கர் (கிராம பஞ்.,) பரமத்திக்கும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக பி.டி.ஓ., ஜெயக்குமரன், சேந்தமங்கலத்துக்கும் (வட்டார பஞ்.,), பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், எலச்சிப்பாளைம் பி.டி.ஓ., (வட்டார பஞ்.,) பி.மலர்விழி, ராசிபுரத்துக்கும், அங்கு பணியாற்றிய அருளப்பன், அதே வட்டாரத்தில் வட்டார பஞ்சாயத்துக்கும், வெண்ணந்தூர் பி.டி.ஓ., (கிராம பஞ்.,) சரவணன், திருச்செங்கோட்டுக்கும், ராசிபுரம் பி.டி.ஓ. (கிராம பஞ்.,) மேகலா, வெண்ணந்தூருக்கும் இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.