...
May 3, 2024
குமாரபாளையத்தில் வண்டி வேடிக்கை

குமாரபாளையத்தில் வண்டி வேடிக்கை

குமாரபாளையத்தில் காளியம்மன் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்தும், ராட்சத கடவுள் உருவங்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீ காளியம்மன் மாரியம்மன் பண்டிகை கடந்த 13 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 15ம் நாள் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. பதினாறாம் நாளானநேற்று (29.02.24) வண்டி வேடிக்கை எனும் கடவுள் அவதார […]

குமாரபாளையத்தில் வெகுவிமர்சியாக நடைபெற்ற தேர் திருவிழா

குமாரபாளையத்தில் வெகுவிமர்சியாக நடைபெற்ற தேர் திருவிழா

குமாரபாளையத்தில் மாசி மாதம் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் பண்டிகையை முன்னிட்டு தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமான நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையன்று நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து விழாவின் 16-ம் நாளான நேற்று (29.02.24) தேர் […]

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எக்ஸெல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குழந்தைகள் மாட்டு வண்டியில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

முதல் முறையாக மாட்டு வண்டியில் பயணித்து vibe ஆன மழலையர்

குமாரபாளையத்தில் உள்ள எக்ஸெல் பப்ளிக் பள்ளியில் பொங்கல் பண்டிகையொட்டி நடைபெற்ற விழாவில், குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு முதன்முறையாக மாட்டு வண்டியில் பயணம் செய்து மகிழ்ந்தனர். தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 15-ம் தேதி தை முதல் நாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையாக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், அரசு கல்லூரி மற்றும் பள்ளிகள் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பொங்கல் விழா […]

குமாரபாளையத்தில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய திமுக மேற்கு மாவட்ட செயலாளர்

குமாரபாளையத்தில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய திமுக மேற்கு மாவட்ட செயலாளர்

குமாரபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் வழங்கினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் துவக்கி வைத்து 216 மாணவர்களுக்கு விலையில்லா […]

குமாரபாளையத்தில் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் தங்கமணி

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனங்கூர் ஊராட்சி பகுதியில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்து பூமி பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனங்கூர் ஊராட்சி பகுதியான, பழையபாளையம் பகுதியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முன்னாள் […]

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய குஜராத் எம்.பி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை குஜராத் மாநிலங்களவை பெண் உறுப்பினர் ரமீலா பென் பாரா துவக்கி வைத்தார். மேலும் ஆங்கில புத்தாண்டினை கேக் வெட்டி கொண்டாடினர். மத்திய அரசு விஸ்வகர்மா என்ற திட்டத்தின் மூலம் சிறுகுரு தொழில்களை ஊக்குவிக்கவும், குல தொழிலை வளர்க்கவும் விஸ்வகர்மா என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சூழ்நிலையில், கிராமப் பகுதிகளிலும் விஸ்வகர்மா […]

சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் பகுதியில் செயல்படும் நகராட்சி துவக்க பள்ளியில், தமிழக அரசின் புதிய திட்டமான காலை சிற்றுண்டி தயாரிக்கும் உணவகத்தில், தெற்கு காலனி பகுதியைச் சேர்ந்த கௌரிகாஞ்சனா என்ற பெண்மணியும், தம்மன்ன செட்டியார் வீதி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரி என்ற பெண்ணும் சமையலராக பணிபுரிந்து வந்தனர். […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.