நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த முட்டை விலை
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே கோழிப்பண்ணை வரலாற்றிலேயே அதிகப்பட்ச விலை ஆகும்.
நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைக்கான கொள்முதல் விலையை “தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு – (NECC)” என்ற அமைப்பு தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இன்று நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளில் 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே இதுவே அதிகப்பட்ச விலை ஆகும்.
இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில்.., கடந்த சில நாட்களாக கோழிப்பண்ணை தீவன மூலப்பொருட்களான மக்கா சோளம், சோயா போன்றவற்றின் விலை உயர்ந்து வருவதாகவும் இதனால் முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் எனவே முட்டையின் கொள்முதல் விலையை அதிகபட்சமாக 5 ரூபாய் 70 காசுகளுக்கு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் இது காரணமாக இருந்தாலும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை துவங்கி உள்ளதால் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது குளிர்காலம் என்பதால் பண்ணைகளில் குறைவாகவே முட்டை உற்பத்தி செய்யப்படுவதாகவும் எனவே உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பே முட்டையின் விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள்.
சில்லறை விற்பனையில் முட்டை ஒன்று 6 ரூபாய் முதல் 6 ரூபாய் 50 காசுகள் வரை விற்பனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
- நாமக்கல்