“நெகிழி இல்லா நாமக்கல்” உருவாகிட மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட வேண்டுகோள்
“நெகிழி இல்லா நாமக்கல்” உருவாகிட மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் ரோட்டரி சங்கத்தின் கூட்டம் நாமக்கல் சூட்டிங் அகாடமி அரங்கில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், வணிகர்களின் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அரசு விதித்துள்ள தடை குறித்து பேசினார்.
வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி “நெகிழி இல்லா நாமக்கல்” உருவாகிட நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தோடு ஒன்றிணைந்து செயல்பட ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தில் பேசிய ரோட்டரி சங்க நிர்வாக செயலாளர் சதீஸ்குமார், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மேற்கொள்ளும் நிகழ்ச்சிக்கு நாமக்கல் ரோட்டரி சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் மற்றும் நாமக்கல் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க ; பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு வித்தியாசமான முறையில் யோசித்த தனியார் அறக்கட்டளை
- நாமக்கல்