...
April 26, 2024
#செய்திகள்

மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு நாமம் போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்ககோரி விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நாமம் போட்டு, கரும்பு தோகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்ககோரி விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நாமம் போட்டு, கரும்பு தோகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திமுக சார்பில் கடந்த 2021 ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து கடந்த 3 ஆண்டுகளாகியும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் நிறைவேற்றாததை கண்டித்து நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் விவசாயிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் நாமம் போட்டு கைகளில் கரும்பு தோகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க ; நாமக்கல்லில் டாக்டர் பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு..!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.