...
April 22, 2024
#க்ரைம் #செய்திகள்

படிச்சது ஓமியோபதி.. பார்க்கறது இங்கிலீஸ் மருத்துவம்..!

படிச்சது ஓமியோபதி பார்க்கறது..! இங்கிலீஸ் மருத்துவம்..!

பள்ளிபாளையம் அருகே ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்த மருத்துவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டை பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு, ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், குமாரபாளையம் தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாரதி கொடுத்த புகாரின் பேரில், மருந்து ஆய்வாளர் மற்றும் மருத்துவ ஆய்வாளர் தலைமையில் பள்ளிபாளையம் போலீசார் தனியார் மருத்துவமனையில் திடீர் சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த ஹோமியோபதி மருத்துவர் மதிவாணன், நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் பரிந்துரை செய்வதும் மருந்துகளை ஊசிகள் மூலம் செலுத்துவது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க :  நாமக்கல்லில் ஆண்களை விட பெண்களே அதிகம் : ஆட்சியர் வெளியிட்ட Exclusive ரிப்போர்ட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.