அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ மதிவேந்தன். இவர் தமிழக அரசின் வனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமைச்சர் மதிவேந்தன் தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, ஸ்கேன் செய்ததில் அவருக்கு குடலிறக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அதனால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அறுவை சிகிச்சை முடிந்து நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாமக்கல்