நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனலடித்துக் கொண்டு இருக்கிறது. திரும்பும் இடமெல்லாம், கூட்டம், கூட்டமாய் வாக்கு சேகரிக்க தொண்டர்படை களமாடி வருகிறது. இதோடு, அரசியல் கட்சியினர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவிடுகின்றனர். இந்த நிலையில், ஒத்தை ஆளாய் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராய் களமிறங்கி, டிஜிட்டல் பிரச்சாரம் மூலம், நாமக்கல்லின் பிரச்சினைகளை பதிவிட்டு வருகிறார் தீபன் சக்கரவர்த்தி எனும் 33 வயது இளைஞர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் லாரி சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தீபன் […]
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்மணி என்பவர் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்த்த குட ஊர்வலத்துடன் சென்றவர்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார். இந்நிலையில் நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கிலிப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கிருந்த மூதாட்டிகளை பாடல் பாட சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் மூதாட்டிகளும் பாடல்களை பாடினார். அதேபோல் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியும் எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்களை பாடி வாக்கு சேகரிப்பில் […]
நாமக்கல்லில் 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் 68 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் உமா, .நாமக்கல் […]