வளையப்பட்டி & மோகனூரில் மின்நிறுத்தம்..! எப்போ தெரியுமா..?
வளையப்பட்டி மற்றும் மோகனூர் பகுதிகளில் வருகின்ற 8ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஒருநாள் மாதாந்திர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்வது நல்லது.
இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு மாதமுமம், துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வருகிற 8ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :
வ.எண் | மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் |
1 | வளையப்பட்டி |
2 | மேட்டுப்பட்டி |
3 | புதுப்பட்டி |
4 | வாழவந்தி |
5 | ரெட்டையாம்பட்டி |
6 | ஜம்புமடை |
7 | செவ்வந்திப்பட்டி |
8 | குரும்பப்பட்டி |
9 | நல்லூர் |
10 | திப்ரமகாதேவி |
11 | வடுகப்பட்டி |
12 | மோகனூர் |
13 | ஒருவந்தூர் |
14 | அரூர் மேடு |
ஆகிய பகுதிகளில் 8ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாமக்கல்