நாமக்கல்லில் குரூப் – 4 இலவச பயிற்சி
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP – IV தேர்விற்கு இலவச TEST BATCH, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது.
தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2023 ஆம் ஆண்டு வெளியான TNPSC GROUP IV தேர்வில் 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் உள்ளனர். TNUSRB SI தேர்வில் 5 நபர்கள் தேர்ச்சிப் பெற்று பணியில் உள்ளனர். TNUSRB PC தேர்வில் 17 நபர்கள் தேர்ச்சிப் பெற்று தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2024 ஆம் ஆண்டு வெளியான TNUSRB SI தேர்வில் 5 நபர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள TNPSC GROUP II முதன்மை தேர்வில் 9 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வாகியியுள்ளனர்.
குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமாகவோ, அல்லது [email protected] என்ற இ-மெயில் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.
இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டுவரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- நாமக்கல்