...
April 23, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணியை எம்பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

சிறுதானியத்தில் உள்ள நன்மைகள் குறித்தும் அதில் உள்ள சத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாமக்கல்லில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாமக்கல் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் “சர்வதேச சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது.

இதில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு இருச்சக்கர பேரணி மற்றும் நடைபயண பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் சிறுதானிய உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதில் உள்ள சத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “விழிப்புணர்வு பதாகைகளை” கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். மேலும் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் சிறுதானிய உணவுகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் எம்பி மற்றும் ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளை ருசிப்பார்த்தனர்.

இதையும் படிங்க: சிறுதானியங்கள் சாகுபடியில் நாமக்கல் மாவட்டம் சாதனை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.