திருச்செங்கோட்டில் புகையில்லா போகி விழிப்புணர்வு : எம்.எல்.ஏ ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி அதிகாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கயிறு இழுக்கும் போட்டி உறியடிக்கும் போட்டி, இசை நாற்காலி போட்டி, ஆகியவை நடைபெற்றது.
சமத்துவ பொங்கல் விழா ;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளை ஒட்டி சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது. பொங்கல் விழாவை ஒட்டி கரும்பு மஞ்சள், இஞ்சி ஆகியவை சுற்றிய பானை வைத்து பச்சரிசி, வெல்லம், இட்டு பொங்கல் வைத்து படையல் இடப்பட்டது. இதில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மண்டல நகரமைப்பு குழு உறுப்பினர் மதுரா செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொங்கல் பானையில் அரிசி இட்டனர்.
பொங்கல் சிறப்பு விளையாட்டுகள் நடைபெற்றது :
மூன்று மதங்களைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் பானையில் அரிசி இட்டு பொங்கல் வைத்தனர். பொங்கல் விழாவை ஒட்டி நகராட்சி வளாகத்தில் கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி போட்டி, உறியடித்தல் போட்டி, உணவு உண்ணும் , என பல்வேறு வகையான போட்டிகள் நடந்தது. தொடர்ந்து பள்ளி குழந்தைகள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு ஆகியவற்றை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க ; WingsOfDMK ஹேஷ்டேக் – உடனடியாக இணைந்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர்
- திருச்செங்கோடு